Wednesday, September 18, 2024

பரம்பொருள் 5

வருடம் கடக்க மனம் அமைதி அடைகிறது ..... அது பயத்தை உருவாக்குகிறது .... அம்மையப்பன் என்பது பாதையில் வரும் ஒரு நிலை.... சிக்கலான மன அடுக்குகள் இடையே கடந்து வரும் போது அம்மையப்பனையும் கடந்து போக வேண்டியிருக்கிறது ..... அதைத் தாண்டி   போனால் நமக்கு என்ன இருக்கிறது .....ஒன்றுமில்லை .... பெருவாரியான மக்கள் இங்கே நின்று தான் பேசுகிறார்கள்... கேட்கிறார்கள்.... நான் எழுதினால் பேசினால். இவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா  என்று கேலி செய்கிறார்கள் ....... இயற்கையை ஆட் கொள்ளவும் அதை அரவணைப்பிற்குள் தக்க வைக்க தான் அம்மையப்பன் இருக்கிறார்கள் என்று காட்டினால் எல்லோரும் ... அதை ஆமோதித்து ... சரி என்று ஏற்றுக் கொள்கிறார்கள்..... ஆகையால் இப்படியே போய் கொண்டே இருக்க வேண்டியது தான் .... எவ்வளவு காத்திருப்பு எத்தனை காலம் என்று கேட்டதற்கு ...... அதற்குள் தானே இருக்கிறாய் எதற்கு இத்தனை அவசரம் என்றாகிறது ..... தகவல் வரவில்லை காத்திரு என்று மட்டும் பதில் வருகிறது ..... தேவாமிர்தத்தை பருகி கொண்டு இருக்க... உனக்கு எதற்கு கசப்பு .... என்கிறது ..... இடியானதும் மின்னலையும் நாக்கில் இறக்கி ... அப்படியே சப்பி ருசிப் பார்த்தால் ... வெறும் உப்பாக கரிக்கிறது ..... கடலை ஒரு கையளவு அள்ளி வாயில் உறிஞ்சுவது போல் இருந்தது .... அதை துப்பி விட்டுப் பார்த்தால்  மஞ்சள் பூக்களாக பூத்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது ..... இயல்பு தானே ..... உப்பின் மகிமை அறிய முழு கடலையும் உள்வாங்கி . கொள்வதற்கு தானே...எதற்கு கிரிவலம் சுற்றுகிறார்கள் என்று தெரிகிறது .... அம்மை அப்பனை தான் இவர்களைச் சுற்ற விட்டிருக்கிறார்கள்... மலையே சிவனாக இருக்கும் போது.... அண்டத்தை கேட்ப்பானேன் .... வயிறு முழுக்க காற்றை நிரப்பாமல் இருக்க வேண்டும் ..... அது ஆகாயம் ஊடே உன்னிடம் பதில் சொல்லி தூங்க விடாமல் செய்கிறது ... சமயங்களில் பயங்கரப் பசி எடுக்கிறது .... நன்றாக சாப்பிட்டு சுற்ற வேண்டி வருகிறது ..... இன்று வானத்தில் வரும் மழை  துளி நமக்கானது.... எத்தனை சூட்சுமமான உலகை படைத்த இறைவன் புலன்களுக்கு எட்டாத சிருஷ்டியை நம்மெதிரில் உலவ விட்டிருப்பதாக நாம்  நினைக்கிறோம் .... காண்பதற்குள் மறைந்து விடுகிறது.... புரிந்துக் கொள்வதற்குள் மறந்தும் விடுகிறது.... இது முட்டாள்தனமாக கூட இருக்கலாம்..... மறைவதும் மறந்து போவதும் இயற்கைக்குள் இயக்கநிலை செய்கையே. நிறைவடையாத இந்த உடம்பில் எத்தனை சக்கைகளை ஏற்றிக் கொண்டே இருப்பது....அம்மை யப்பன் வந்த பிறகு தேவதீர்த்தம் நாக்கில் விழ வைத்தார்கள்.... கடலில் இருந்து எத்தனை நீர் எழும்பி மேகமாய் மாறி மழையாய் இடியாய் மின்னலாய் இந்த பூமியில் பொழிய மாதவம் செய்தவர்களல்லவா நாம் ..... அதை ஆகாயமாக பருக தான் இத்தனை வருடம் தவம் செய்ய வேண்டி வந்ததோ..... என்ன சித்தர்கள் நீங்கள் ஏன் அதை மறைக்கிறீர்கள்.... தடுப்பை உருவாக்குகிறீர்கள்.. மறைத்துப் போக செய்கிறீர்கள்.. நீரையே களவுக் கொண்டு கயிலாய்த்திற்கு எடுத்துச் சென்று விடுகிறீர்கள்..... யார்க்கு கொடுப்பதற்கு சமாதிக்குள் அவற்றை வைத்துக் கொண்டு ஒளிந்துக் கொண்டீர்கள்.... உணர்ச்சியை புழிந்து விட்டு உணர்வை மனத்திற்குள் எழுப்பி விட்டீர்கள்.... நாம் தூங்காமல் பேசி கொண்டும் பாட்டு கேட்டு கொண்டும் மட்டுமே இருக்கிறோம் ..... மனமே இல்லாமல் உத்தரவுக்கு காத்திருக்கும் நாய் போல் நாம் ஆகி விட்டோம் ..... நீ போய் கொண்டே இரு என்று சொல்கிறீர்களோ .... தலை உச்சியில் ஓட்டை விழுந்து விட்டதா என்று தடவி பார்த்து கொள்ள வேண்டியிருக்கிறது ........ ஜாதகம் நாம் எழுதியது தானே..... அம்மை அப்பன் இல்லையே ...... பேரண்டம் காக்கும் எண்ணற்ற ரகசியங்களை குறி சொல்பவர் ஜாதகம் கணிப்பவர் எப்படி சொல்லிவிட முடியும்.... அம்மை அப்பன் அருளிருந்தால் பேரண்டத்தை உணர்ந்தவர் ஆகி விடுவோமே ..... நம்மை கடவுளாக நினைத்து கொள்வது இயலாத ஒன்று .... நிறைவின்மையை குறிப்பது அது..... அண்மையில் ஜீவாத்மா பரமாத்மா என்ற ஒன்று இல்லை என்று சொன்னதை அவர்கள் ஏற்கவேயில்லை ..... நாம் உப்பை தின்று வருவோம் ....மண் உப்பு நிரம்பிய உடம்பை தொடாதவாறு ஒளி எழும்பி நிறைத்திடுமாம் ....மாய வேலை ஒன்றிருக்கிறது .... பல உலகத்தில் எழும்பி நின்று மக்களை சிருஷ்டியை அண்டத்தை காலத்தை கடந்து நேரத்தை நிறுத்தி பார்ப்பது ... நேரம் அசைந்த வண்ணம் இருக்கிறது ... தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது ...அது உருவாகி தோன்றி விட்டால் நிறைவு தன்மை வந்தடைந்தது என்று நாம் அறிகிறோம் ...