Wednesday, September 18, 2024

பரம்பொருள் 5

வருடம் கடக்க மனம் அமைதி அடைகிறது ..... அது பயத்தை உருவாக்குகிறது .... அம்மையப்பன் என்பது பாதையில் வரும் ஒரு நிலை.... சிக்கலான மன அடுக்குகள் இடையே கடந்து வரும் போது அம்மையப்பனையும் கடந்து போக வேண்டியிருக்கிறது ..... அதைத் தாண்டி   போனால் நமக்கு என்ன இருக்கிறது .....ஒன்றுமில்லை .... பெருவாரியான மக்கள் இங்கே நின்று தான் பேசுகிறார்கள்... கேட்கிறார்கள்.... நான் எழுதினால் பேசினால். இவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா  என்று கேலி செய்கிறார்கள் ....... இயற்கையை ஆட் கொள்ளவும் அதை அரவணைப்பிற்குள் தக்க வைக்க தான் அம்மையப்பன் இருக்கிறார்கள் என்று காட்டினால் எல்லோரும் ... அதை ஆமோதித்து ... சரி என்று ஏற்றுக் கொள்கிறார்கள்..... ஆகையால் இப்படியே போய் கொண்டே இருக்க வேண்டியது தான் .... எவ்வளவு காத்திருப்பு எத்தனை காலம் என்று கேட்டதற்கு ...... அதற்குள் தானே இருக்கிறாய் எதற்கு இத்தனை அவசரம் என்றாகிறது ..... தகவல் வரவில்லை காத்திரு என்று மட்டும் பதில் வருகிறது ..... தேவாமிர்தத்தை பருகி கொண்டு இருக்க... உனக்கு எதற்கு கசப்பு .... என்கிறது ..... இடியானதும் மின்னலையும் நாக்கில் இறக்கி ... அப்படியே சப்பி ருசிப் பார்த்தால் ... வெறும் உப்பாக கரிக்கிறது ..... கடலை ஒரு கையளவு அள்ளி வாயில் உறிஞ்சுவது போல் இருந்தது .... அதை துப்பி விட்டுப் பார்த்தால்  மஞ்சள் பூக்களாக பூத்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது ..... இயல்பு தானே ..... உப்பின் மகிமை அறிய முழு கடலையும் உள்வாங்கி . கொள்வதற்கு தானே...எதற்கு கிரிவலம் சுற்றுகிறார்கள் என்று தெரிகிறது .... அம்மை அப்பனை தான் இவர்களைச் சுற்ற விட்டிருக்கிறார்கள்... மலையே சிவனாக இருக்கும் போது.... அண்டத்தை கேட்ப்பானேன் .... வயிறு முழுக்க காற்றை நிரப்பாமல் இருக்க வேண்டும் ..... அது ஆகாயம் ஊடே உன்னிடம் பதில் சொல்லி தூங்க விடாமல் செய்கிறது ... சமயங்களில் பயங்கரப் பசி எடுக்கிறது .... நன்றாக சாப்பிட்டு சுற்ற வேண்டி வருகிறது ..... இன்று வானத்தில் வரும் மழை  துளி நமக்கானது.... எத்தனை சூட்சுமமான உலகை படைத்த இறைவன் புலன்களுக்கு எட்டாத சிருஷ்டியை நம்மெதிரில் உலவ விட்டிருப்பதாக நாம்  நினைக்கிறோம் .... காண்பதற்குள் மறைந்து விடுகிறது.... புரிந்துக் கொள்வதற்குள் மறந்தும் விடுகிறது.... இது முட்டாள்தனமாக கூட இருக்கலாம்..... மறைவதும் மறந்து போவதும் இயற்கைக்குள் இயக்கநிலை செய்கையே. நிறைவடையாத இந்த உடம்பில் எத்தனை சக்கைகளை ஏற்றிக் கொண்டே இருப்பது....அம்மை யப்பன் வந்த பிறகு தேவதீர்த்தம் நாக்கில் விழ வைத்தார்கள்.... கடலில் இருந்து எத்தனை நீர் எழும்பி மேகமாய் மாறி மழையாய் இடியாய் மின்னலாய் இந்த பூமியில் பொழிய மாதவம் செய்தவர்களல்லவா நாம் ..... அதை ஆகாயமாக பருக தான் இத்தனை வருடம் தவம் செய்ய வேண்டி வந்ததோ..... என்ன சித்தர்கள் நீங்கள் ஏன் அதை மறைக்கிறீர்கள்.... தடுப்பை உருவாக்குகிறீர்கள்.. மறைத்துப் போக செய்கிறீர்கள்.. நீரையே களவுக் கொண்டு கயிலாய்த்திற்கு எடுத்துச் சென்று விடுகிறீர்கள்..... யார்க்கு கொடுப்பதற்கு சமாதிக்குள் அவற்றை வைத்துக் கொண்டு ஒளிந்துக் கொண்டீர்கள்.... உணர்ச்சியை புழிந்து விட்டு உணர்வை மனத்திற்குள் எழுப்பி விட்டீர்கள்.... நாம் தூங்காமல் பேசி கொண்டும் பாட்டு கேட்டு கொண்டும் மட்டுமே இருக்கிறோம் ..... மனமே இல்லாமல் உத்தரவுக்கு காத்திருக்கும் நாய் போல் நாம் ஆகி விட்டோம் ..... நீ போய் கொண்டே இரு என்று சொல்கிறீர்களோ .... தலை உச்சியில் ஓட்டை விழுந்து விட்டதா என்று தடவி பார்த்து கொள்ள வேண்டியிருக்கிறது ........ ஜாதகம் நாம் எழுதியது தானே..... அம்மை அப்பன் இல்லையே ...... பேரண்டம் காக்கும் எண்ணற்ற ரகசியங்களை குறி சொல்பவர் ஜாதகம் கணிப்பவர் எப்படி சொல்லிவிட முடியும்.... அம்மை அப்பன் அருளிருந்தால் பேரண்டத்தை உணர்ந்தவர் ஆகி விடுவோமே ..... நம்மை கடவுளாக நினைத்து கொள்வது இயலாத ஒன்று .... நிறைவின்மையை குறிப்பது அது..... அண்மையில் ஜீவாத்மா பரமாத்மா என்ற ஒன்று இல்லை என்று சொன்னதை அவர்கள் ஏற்கவேயில்லை ..... நாம் உப்பை தின்று வருவோம் ....மண் உப்பு நிரம்பிய உடம்பை தொடாதவாறு ஒளி எழும்பி நிறைத்திடுமாம் ....மாய வேலை ஒன்றிருக்கிறது .... பல உலகத்தில் எழும்பி நின்று மக்களை சிருஷ்டியை அண்டத்தை காலத்தை கடந்து நேரத்தை நிறுத்தி பார்ப்பது ... நேரம் அசைந்த வண்ணம் இருக்கிறது ... தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது ...அது உருவாகி தோன்றி விட்டால் நிறைவு தன்மை வந்தடைந்தது என்று நாம் அறிகிறோம் ...

Saturday, November 18, 2023

பரம்பொருள் 4

 பெங்களூர் போத்தீஸ் துணி கடை இருக்கும் மெயின் ரோட்டின் நடுவில் டிராபிக் காரணமாக ஆட்டோ டிரைவர் எங்களை  இங்கேயே இறங்கி கொள்ளுங்கள்... அங்கிருந்து  நடந்துப் போகுமாறு சொன்னார்...... மகள் விசேஷத்திற்கு பட்டு சேலை எடுக்க வேண்டி போத்திஸ் துணிக்கடை போனால்... அதைச் சுற்றி  எங்கும் கூட்டமான கூட்டம் ..... தீபாவளி பண்டிகை வேறு....நானும் மனைவியும்  பிளாட்பாரம்  மீது ஏறி நடந்து போய் கொண்டு இருந்தப் போது ....எதிரே இரண்டு பக்கமும் இரண்டு குழந்தைகளையும் பிடித்து கொண்டு நடுத்தர வயது பெண் ஒருவர் தன் கைகளில் போத்திஸ் துணி கடையின் ஒரு கட்டை பையை தூக்கியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்.... அவர் நடந்து வந்து கொண்டிருந்தபோதே  அவர் மகன் சட்டென்று  நின்று ... தான் கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை திறந்து அதிலிருந்து சிறிது குடி நீரை அங்கிருந்த கேட்டின் வாயிலில் வைத்திருந்த  அரை கவளம் நீர் நிரம்பியிருந்த ....மண் கவள சட்டியில்  வாட்டர் பாட்டிலில் இருந்து நீரை அதில் ஊற்றி நிரப்பினான் ....அந்த தாய் அவனை இழுத்துப் பிடித்து திட்டி கொண்டே எங்களை கடந்துச் சென்றார் . .... நாய்கள் தண்ணீர் குடிக்கும் அம்மா என்று அந்த சிறிய பையன்  கன்னடத்தில் விவாதம் செய்துக் கொண்டே எங்களைக் கடந்துச் சென்றான்  ...அவனைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக இருந்தது... அந்த தண்ணீர் கவளம்  நாய்கள் நீர் குடிப்பதற்காக தான் வைக்கப் பட்டிருக்கிறது என்று அவனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? .... மாய ரூபி அவனருகில் வந்து நீர் நிரம்பி வழிந்த கவளத்தை குனிந்துப் பார்த்ததை மாயாவி பார்த்துக் கொண்டே வந்தான்..... நீர் நிரம்பின அளவை மாய ரூபி அளவெடுத்து பார்ப்பதுப் போல தண்ணீரை தொட்டு தொட்டு பார்த்தது.....அந்த பையனுக்கு இந்த வயதிலேயே இப்படியெல்லாம் உதவி செய்யனும்னு தோன்றுகிறதே.... இப்படி இவன் இருந்தால் எதிர்காலத்தில் உங்களை மாதிரி பைத்தியமாகி விடுவான் என்று என்னை மனைவி சாடினாள்.... எப்படி இது போன்ற எண்ணங்கள் அவனுக்கு உதித்தது என்று கேட்டாள்..... அது அவன் பிறவி குணம்.....பிறவியெடுத்து வருவதே அதற்கு தானே .... உயிர்களை பார்க்கத் தானோ என்று திரும்பி அவர்கள் போவதை பார்த்தேன் ...அவன் அதில் நீர் ஊற்றும் போதே ...மண்கவளம் அருகில் நின்றிருந்த மாயரூபி உடல் குலுக்கி தலையை முன்னும் பின்னும் முதுகை  வளைத்து  மகிழ்சியாக சிரித்தது .... கண்டடைந்து விட்டதை அறிந்த சந்தோஷத்திலா ? .... அந்த தாய் அவனைப் பிடித்து இழுக்கும் போது அவன் கைகளில் இருந்து வாட்டர் பாட்டிலிலிருந்த நீர் சிதறி பிளாட்பாரம் மீதும் தெளித்தது..... அந்த கேட்டின் வாயிலில் நின்று உள்ளே பார்த்தால் .... அது ஒரு பாழடைந்த பழைய கோவில் :உள்ளே சிறிய  கதவு தாழ்பாள் போட்டிருந்தது ....சிலை என் கண்களில் தென்படவில்லை .... உள்ளே இருட்டாக இருந்தது..... அதை தாண்டி சிறிது தூரத்தில் போத்திஸ் துணி கடை தெரிந்தது..... உள்ளிருக்கும் கடவுள் இந்த சிறிய பையனிடம்  மட்டுமே தண்ணீர் ஊற்ற சொன்னதா? கோடிக்கணக்கில் மக்கள் அதை கடந்து சென்றிருப்பார்கள்..... யார்க்கும் அப்படி தோன்றவில்லையே ..... சிலர்க்கே அந்த வாய்ப்பு அளிக்கப் படுகிறது...... பிரபஞ்சம் முழுமைக்கும் தேவையானதை அதுவே எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்கிறது.... தோப்பிலிருந்தாலும் அந்த சிறிய பையன் தனி மரம் தானே என்று நினைத்துக் கொண்டே... போத்திஸ் துணி கடை வாயிலை வந்தடைந்தோம்....

Wednesday, November 8, 2023

பரம்பொருள் 3

 பரம்பொருள் 3

தெய்வம் ஏற்றம் பெற்றவர்... அவன் எதிரே  ஆக்ரோஷத்துடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது அவனுக்கும் அவர்க்குமிடைய  இரண்டு அடி இடைவெளியே இருந்தது... அவர் முகம் மற்றும் கைகள் எல்லாம் சிவந்த நிறமாக பரவி  மாறி விட்டிருந்தது. கண்கள் சொறுகி கொண்டே  அவனைப் பார்த்து கனத்த  சத்ததுடன் பேசினார்..... அந்த சத்தம் கர்ஜனைப் போன்றே இருந்தது.....  ஹால் முழுக்க அந்த சத்தம் பரவி எதிரொலித்தது.... என்னைப் பார்க்காதே என்று தன் கைகளைக் கொண்டு முகத்தை மறைக்க முயற்சி செய்தார்.   அவனை விட்டு தள்ளி நிற்க முயற்சித்தார்....இருளுக்குள் பரவி இருக்கும் தெய்வங்கள் எல்லாம் எதற்காக ,எதைச் சொல்வதற்காக  இத்தனை தூரம் வந்தார்கள் என்று அவனால் அங்கே உணர முடியவில்லை..... தெய்வத்தை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.... அருகிலிருக்கும் அறைகளில் இருந்தவர்கள் அலறல் சத்தம்  கேட்டு  ஒடி வந்தார்கள்..... அவனுக்கு மன எழுச்சி ஏற்பட்டு உடம்பெல்லாம் சிலிர்த்து நின்றது... தெய்வத்தை அங்கே  தெய்வமாக கண்டான் .... இரண்டடி இடைவெளியில் ஒளி வெள்ளம் கொண்ட மாயசொரூபி முன் அவன் தன்னை மறந்து அங்கேயே நின்றிருந்தான் . பருப் பொருள்களின் இடையிடைய போய் மனம்  சொருகி கொண்டது.... உடம்பில் ஊர்ந்து ஊர்ந்து அவன் தலையின் இடப்பக்கமாக செல்லும் அந்த ஓட்டத்தின் உணர்வுகள் ஊர்ந்து செல்வதை கவனித்தான்.....மனித உடம்பை எதற்காக எடுத்து கொண்டு  பேசுகின்றன என்று யோசித்தான்....  எல்லா மனித உடம்பையும் எடுப்பதில்லையே .... அது ஏன்? ..... ஆட்கள் வந்தவுடனேயே நின்றிருந்த  தெய்வம் ....அவர் உடம்பிலிருந்து வெளியேறிப் போய் விட்டதை கவனித்தான்  .... சொறுகி நின்ற கண்கள் சரியாக  நேராக அவனைப் பார்த்தன......வந்துப் போன தெய்வத்தின் அடையாளமே அவர்க்கு  இல்லை என்பதை தெரிந்து கொண்டான் ....பலர்  எதற்கு இவர் இப்படி கத்தினார்? என்று கேட்டார்கள்..... தெரியவில்லை என்று சொன்னான்...  இவர் காலையிலிருந்து எங்கும் உட்காரவேயில்லை. உடம்பு சுகமில்லையா என்று அவரையே கேட்டார்கள்.....இவர் இங்குமங்கும் நடந்துக் கொண்டேயிருந்தார் என்று கூட்டத்திலிருந்த ஒருவர் அவனிடம் சொன்னார்...அவர் உள்ளே சென்று சபை முழுக்க ஆட்கள் நிரம்பியிருந்தவர் மத்தியில்  அமர்ந்துக் கொண்டார். பின்னர் மேடையில் ஏறி சிலருடன் அமர்ந்தவர் அங்கிருந்து அவனை பார்த்தவுடன்  அவர்க்கு முன்பிருந்ததைப் போன்று முகம் மெல்லாம்  சிவந்தது....போகும் போது  ஒருவரிடம் நின்று எதோ பேசினார்.....அவனைக் கடந்து நடந்து செல்லும்போது சொல்லிவிட்டேன் என்று சொன்னார்.....மாலை அவன் பைக்கில் ...அந்த புகழ்பெற்ற ஆலயத்தைக் கடந்துச் செல்லும் போது .... சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள அந்த கோவிலின் மேலிருந்து ஒளி கீழே இறங்கிப் பரவி  மெயின் ரோடு வரை பரவி கரைந்து கொண்டு இருந்ததை கவனித்தான் .... எதற்காக அவனை தேடி அலுவலகம் வரை வர வேண்டும்..... எதைச் சொல்ல அந்த தெய்வம் தேடி வந்ததேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே கோவிலை கடந்து சென்றான்..... 🌿