Tuesday, February 24, 2026

மகாலிங்க மலை தென்காசி

 

20 வருசம் முன் இந்த மலைக்குப் போயிருக்கிறேன்.... தென்காசிக்கு கிழக்கில் இருக்கிறது... அப்ப படிகள் பாதையெல்லாம் கிடையாது.... முட்களும் புதர்களும் பாறைகள் இடையில் அடர்ந்து கிடந்தது... மலை உச்சியில் மிக வயதான, நடக்க முடியாத கிழவர் ஒருவர் பாறையின் மீது அமர்ந்திருந்தார்...  எப்படி மேலே ஏறி வந்தீர்கள் என்று கேட்டதற்கு... பதில் சொல்லவில்லை.... கையில் கம்பு ஒன்று வைத்திருந்தார்... என் கையில் இருந்த நீர் பாட்டிலையும் ... சிறிது பணமும் கொடுத்தேன்.... அதற்குப் பிறகு இப்ப தான் இந்த மகாலிங்க மலை வீடியோ பார்த்த பிறகு ... மக்கள் எதற்காக அங்கே போகிறார்கள் என்று தெரியவில்லை.... இறை வழிபாடு என்பது வேற சித்தர் வழிபாடு வேற என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்... சித்தர்களை வழிப் பாட்டு முறையால் அடைய இயலாது... அந்த பாறை மேல் சக்கரை பொங்கல் இருக்கு... எடுத்து சாப்பிடு என்றார் அந்த கிழவர்... சிறிய வாழை இலையில் பொங்கல் ஆவி பறக்க அங்க வைக்கப்பட்டு இருந்தது.... இதுப் போன்ற சித்துக்கள் செய்பவர்களை வாழ்க்கை முழுக்க பார்த்து வருகிறேன்.... தென்காசி பெரிய கோவிலைச் சுற்றி நிறைய சித்தர்கள் சமாதி அடைந்துள்ளனர்...  பழைய பேருந்து நிலையத்தில் பக்கத்தில் கூட ஒருவர் சமாதி உள்ளது.... இந்த முறை அவரை கடக்கும் போது என்ன இப்படி கண்டமேனிக்கு சமாதி அடைந்திருக்கிறீர்களே என்று நினைத்துக் கொண்டேன்.... வாசி யோகம் செய்து வரும் காலத்தில்...இது போன்ற சித்துக்களை குருநாதர்... அவரை பார்க்க வரும் மக்களை பயமுறுத்த இப்படி சித்துக்கள் செய்வதை கண்டிருக்கிறேன்.... பள்ளியில் படித்துக் கொண்டிருந்த  மகனை  அழைத்து சென்ற போது அவனுக்கு எந்த சாக்லெட் பிடிக்கும் என்று மஞ்சள் பை ஒன்றில் கையை விட்டு  எடுத்துக் கொடுத்தார்.... இவையெல்லாம் அடர்த்தியான அணுக்கள் கூட்டை சிதைத்து அதை நீர் நிலைக்கு திருப்பி உருமாற்றி கொடுப்பது... என் மனைவி இதெப்படி சாத்தியம் என்று என்னிடம் கேட்டார்.... இயற்கையை கை கொள்ள வேண்டும்.. அதற்கு இருபது வருடமாவது ஆகும்... இந்த மனித உடம்பு உணவுகளால் நிரம்பி உள்ளபடியால் அதை கொஞ்சம் கொஞ்சமாக காற்றால் நிரப்பி வரும் போது ஒரு காலத்தில் அது இயக்கமற்ற நிலைக்கு சென்று அமர்ந்து விடும்...  அன்று மலைக்கு  மூன்று பேர் நாங்கள் சென்றிருந்தோம்... அதில் இருவர் பாதை மாறி சென்று விட்டார்கள்... ஒருவர் கேரளாவை சேர்ந்த புகழ் பெற்ற மாந்திரீகர்.... மற்றவர் வேறு பக்கம் சென்று விட்டார்... காலமும் நேரமும் அழைத்தாலொழிய நம் இஷ்டபடி நமக்கு எதுவும் வாய்க்காது ... அது இறை கைகளில் கூட இல்லை...இப்படியே மூட பழக்கங்களை பழகிக் கொண்டே போனால் மனத்திற்குள் எப்படி ஒடுங்குவது .... ஓர்மைக்கு ஒருவனாக தான் பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும் .... மனதிற்குள் ஒடுங்கியிருக்க பழகி விட்டால் உடைகளே பாரமாய் ஆகி விடாதா.... மனத்தை பயமுறுத்தி கலைத்து கொண்டே இருந்தால் தேடுபவன் தன்னுள் ஒளியை காண்பதை தவிர்த்து புறத்தில் சுமையை தூக்கி அலைபவனாகிறான்.... பிராப்தம் இருப்பவனே கடந்து சென்று தன்னுள் வீற்றிருக்கிறான்.  அதற்குப் பிறகு யாரையும் பொருட்டாக நினைப்பதேயில்லை.... தேவைப்படுவதேயில்லை.யோகம் கற்பிக்கும் பல ஆசிரியர்கள் தவறாக விவரிக்கிறார்கள்... அப்படியொன்று உடம்பினுள் இல்லை... குண்டலினி என்ற ஒன்றே இல்லை.... சக்கரங்கள் என்பது கூட இல்லை... தவம் இயற்றுபவர் அதை உணர்ந்து வரும் போது  கண்கள் வழியாக தான் பார்ப்பதை புரிந்து கொள்கிறார்.... வருடங்கள் கடந்த பின் அப்பியாசம் வெளியே நிற்கும் ஆளை காட்டுகிறது... வெளியில் இருப்பவர் உடம்பை கயிறு கொண்டு கட்டிவிட்டு பார்ப்பார்... மாடுமேய்ப்பவர் கயிறு கொண்டு மாட்டை கட்டி அதை கைகளில் வைத்து கொண்டு மேய்வதை பார்ப்பதைப் போல தான்... நிமிடங்களில் உயிரை எழுப்பி வெளியே பரப்பி  இயக்கமற்ற ஆற்றலுடன் தொடர்பு கொள்கிறார்... இது பல காலம் அப்பியாசம் செய்து அடக்கி கட்டுக்குள் வைத்திருப்பது.... இயற்கையின் கதவு திறந்து வழிவிடாது.... பல காலம் போராடி தான் பெறுகிறார்கள்.... உடம்பிற்குள் காண பழகியவர் பின்னர் வெளிய பார்க்க பழகி அனுபவத்திற்கு வருகிறார்.... அப்போது உயிர் என்பதை வெளியே காண ஆரம்பித்து விடுகிறார்.... இது போதும்... எழுதுபவனுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை ... இதை  எழுதுபவர் வெளியே இருந்து தான் எழுதுகிறார்....

Tuesday, February 17, 2026

சமாதி

 ரமணர், வேதாத்திரி மகரிஷி என்று பலர் நான் யார் என்ற தலைப்பில் பேசியிருக்கிறார்கள்... . எதை நோக்கி பேசுகிறார்கள்  என்று தெரியவில்லை.... நான் யார் என்பதே அங்கில்லை என்கிறார் ஜே.கே... புத்தரை படித்து கொண்டு வரும் போது... அது சாதாரண மானதாக இல்லை என்று புலப்படுகிறது.... தேவைப்படாமலேயே இருந்து விடு என்கிறது... எங்கிருப்பது என்பது வெளியில் இருக்கும் எதோ ஒன்றை கண்டுபிடிப்பதல்ல .... உள்ளுக்குள் விழித்து இருக்கும் ஒன்றை உணர்வது... நான் யார் என்ற ஒன்றுமேயில்லை..... எப்போதும் உள்ளுக்குள் இருப்பது.. அது கண்கள் வழியாக மட்டும் பார்ப்பது என்று நினைக்க கூடாது... உடம்பெல்லாம் ஈர்த்து கிரகிக்க கூடிய ஆற்றலுடையது...மனம் தனியே வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் அதற்குப் பிறகு மீண்டு வராது.... மனக்குவிப்பு ஏற்பட்ட காலத்தில் இதை எழுதுபவன் அறிந்திருந்தான்... யாராவது ஆன்மீகம் சம்பந்தமாக கேள்விகள் கேட்டால் மறுக்காமல் எதாவது பதிலளி என்று அவனுக்கு புகட்டியிருக்கிறார்கள்.... வெறும் அறம் பாடி கொண்டிராதே ... அது தூக்கத்தை சாப்பிட்டு விடும் என்றதாகிவிடுகிறது... எழுதுபவனுக்கு சம்மந்தமேயில்லை.... நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.  பிரபஞ்சத்தில் அவனும் ஒரு அங்கம் அவ்வளவு தான்... தனியே இயங்குகிறான் ...  எழுதுபவன் இயக்கமற்றவனாகி விடும் போது அவனை கிரகித்து எழுதுகிறான் .... இங்கு வெறும் நடந்து முடிந்த வையே எழுதப்படுகிறது... எழுதும் போது கணத்து கணம்  மறந்து போய் மீண்டு திரும்பி வருகிறான்...  அவன் அகங்காரம்... ஆணவம் கொண்டு தான் உலகைப் பார்க்க பழகியிருக்கிறான்... மறக்க பழக .. ஞாபகத்தில் இட்டுக் கொள்ளாதிருக்க.. வழக்கப்படுத்தி கொண்டமையால் தன்னிச்சையாக எல்லாம் இயங்குவதை அறிந்து ஏது மற்றவனாகிறான்... எழுதுபவன் அதை உள்வாங்கி  வெளியில் பதித்து வைத்துக் கொண்டு பறவைகளுக்கு இறை இடுவதைப்போல கொஞ்ச கொஞ்சமாக தூவுகிறான்... பசியே எடுப்பதில்லை... அமர்ந்தால் மீளவே மாட்டான்... சமாதி செய்ய இடம் பார்த்து திரிகிறான்... பார்த்து வைத்த இடம் மழை வந்ததால் வெள்ளம் குள கரையை தாண்டி வந்ததை பார்த்து... தான் உள்ளே அமர்ந்து விட்டால் அதை தாண்டி நீர் வந்து நிற்குமே ... என்று கட்டும் மேஸ்திரியிடம் கேட்டான்.... அதை யோசிப்பது எழுதுபவனுக்கு தெரிகிறது... இந்த உலகில் வாழும் பொழுதே ஒழுங்கிற்குள் நின்று முழுமடைய தலே சிறந்தது  ... அதற்காக தான் தொடர்ந்து சொல்லி வருவது  என்று அண்மையில் ஆசான் சொன்னது நினைவு கொள்கிறான்... உடல்நல குறைவு ஏற்படும் போதெல்லாம் என்னால் முடியலை என்று கீழே விழப்  போகும் நேரத்தில் மாயரூபி எழுந்து வந்து தன்னை தாங்கி பிடித்து மெதுவாக படுக்க வைத்ததை  அறிகிறான்... கண்களை திறக்காமலேயே பார்க்கிறான்...... அந்த கைகளில் குழந்தை போல சாய்ந்து கொண்டான்...