ரமணர், வேதாத்திரி மகரிஷி என்று பலர் நான் யார் என்ற தலைப்பில் பேசியிருக்கிறார்கள்... . எதை நோக்கி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.... நான் யார் என்பதே அங்கில்லை என்கிறார் ஜே.கே... புத்தரை படித்து கொண்டு வரும் போது... அது சாதாரண மானதாக இல்லை என்று புலப்படுகிறது.... தேவைப்படாமலேயே இருந்து விடு என்கிறது.... மனம் தனியே வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் அதற்குப் பிறகு மீண்டு வராது.... மனக்குவிப்பு ஏற்பட்ட காலத்தில் இதை எழுதுபவன் அறிந்திருந்தான்... யாராவது ஆன்மீகம் சம்பந்தமாக கேள்விகள் கேட்டால் மறுக்காமல் எதாவது பதிலளி என்று அவனுக்கு புகட்டியிருக்கிறார்கள்.... வெறும் அறம் பாடி கொண்டிராதே ... அது தூக்கத்தை சாப்பிட்டு விடும் என்றதாகிவிடுகிறது... எழுதுபவனுக்கு சம்மந்தமேயில்லை.... நீங்கள் புரிந்து கொள்வீர்கள். பிரபஞ்சத்தில் அவனும் ஒரு அங்கம் அவ்வளவு தான்... தனியே இயங்குகிறான் ... எழுதுபவன் இயக்கமற்றவனாகி விடும் போது அவனை கிரகித்து எழுதுகிறான் .... இங்கு வெறும் நடந்து முடிந்த வையே எழுதப்படுகிறது... எழுதும் போது கணத்து கணம் மறந்து போய் மீண்டு திரும்பி வருகிறான்... அவன் அகங்காரம்... ஆணவம் கொண்டு தான் உலகைப் பார்க்க பழகியிருக்கிறான்... மறக்க பழக .. ஞாபகத்தில் இட்டுக் கொள்ளாதிருக்க.. வழக்கப்படுத்தி கொண்டமையால் தன்னிச்சையாக எல்லாம் இயங்குவதை அறிந்து ஏது மற்றவனாகிறான்... எழுதுபவன் அதை உள்வாங்கி வெளியில் பதித்து வைத்துக் கொண்டு பறவைகளுக்கு இறை இடுவதைப்போல கொஞ்ச கொஞ்சமாக தூவுகிறான்... பசியே எடுப்பதில்லை... அமர்ந்தால் மீளவே மாட்டான்... சமாதி செய்ய இடம் பார்த்து திரிகிறான்... பார்த்து வைத்த இடம் மழை வந்ததால் வெள்ளம் குள கரையை தாண்டி வந்ததை பார்த்து... தான் உள்ளே அமர்ந்து விட்டால் அதை தாண்டி நீர் வந்து நிற்குமே ... என்று கட்டும் மேஸ்திரியிடம் கேட்டான்.... அதை யோசிப்பது எழுதுபவனுக்கு தெரிகிறது... இந்த உலகில் வாழும் பொழுதே ஒழுங்கிற்குள் நின்று முழுமடைய தலே சிறந்தது ... அதற்காக தான் தொடர்ந்து சொல்லி வருவது என்று அண்மையில் ஆசான் சொன்னது நினைவு கொள்கிறான்... உடல்நல குறைவு ஏற்படும் போதெல்லாம் என்னால் முடியலை என்று கீழே விழப் போகும் நேரத்தில் மாயரூபி எழுந்து வந்து தன்னை தாங்கி பிடித்து மெதுவாக படுக்க வைத்ததை அறிகிறான்... கண்களை திறக்காமலேயே பார்க்கிறான்...... அந்த கைகளில் குழந்தை போல சாய்ந்து கொண்டான்...