Wednesday, November 8, 2023

பரம்பொருள் 3

 பரம்பொருள் 3

தெய்வம் ஏற்றம் பெற்றவர்... அவன் எதிரே  ஆக்ரோஷத்துடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது அவனுக்கும் அவர்க்குமிடைய  இரண்டு அடி இடைவெளியே இருந்தது... அவர் முகம் மற்றும் கைகள் எல்லாம் சிவந்த நிறமாக பரவி  மாறி விட்டிருந்தது. கண்கள் சொறுகி கொண்டே  அவனைப் பார்த்து கனத்த  சத்ததுடன் பேசினார்..... அந்த சத்தம் கர்ஜனைப் போன்றே இருந்தது.....  ஹால் முழுக்க அந்த சத்தம் பரவி எதிரொலித்தது.... என்னைப் பார்க்காதே என்று தன் கைகளைக் கொண்டு முகத்தை மறைக்க முயற்சி செய்தார்.   அவனை விட்டு தள்ளி நிற்க முயற்சித்தார்....இருளுக்குள் பரவி இருக்கும் தெய்வங்கள் எல்லாம் எதற்காக ,எதைச் சொல்வதற்காக  இத்தனை தூரம் வந்தார்கள் என்று அவனால் அங்கே உணர முடியவில்லை..... தெய்வத்தை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.... அருகிலிருக்கும் அறைகளில் இருந்தவர்கள் அலறல் சத்தம்  கேட்டு  ஒடி வந்தார்கள்..... அவனுக்கு மன எழுச்சி ஏற்பட்டு உடம்பெல்லாம் சிலிர்த்து நின்றது... தெய்வத்தை அங்கே  தெய்வமாக கண்டான் .... இரண்டடி இடைவெளியில் ஒளி வெள்ளம் கொண்ட மாயசொரூபி முன் அவன் தன்னை மறந்து அங்கேயே நின்றிருந்தான் . பருப் பொருள்களின் இடையிடைய போய் மனம்  சொருகி கொண்டது.... உடம்பில் ஊர்ந்து ஊர்ந்து அவன் தலையின் இடப்பக்கமாக செல்லும் அந்த ஓட்டத்தின் உணர்வுகள் ஊர்ந்து செல்வதை கவனித்தான்.....மனித உடம்பை எதற்காக எடுத்து கொண்டு  பேசுகின்றன என்று யோசித்தான்....  எல்லா மனித உடம்பையும் எடுப்பதில்லையே .... அது ஏன்? ..... ஆட்கள் வந்தவுடனேயே நின்றிருந்த  தெய்வம் ....அவர் உடம்பிலிருந்து வெளியேறிப் போய் விட்டதை கவனித்தான்  .... சொறுகி நின்ற கண்கள் சரியாக  நேராக அவனைப் பார்த்தன......வந்துப் போன தெய்வத்தின் அடையாளமே அவர்க்கு  இல்லை என்பதை தெரிந்து கொண்டான் ....பலர்  எதற்கு இவர் இப்படி கத்தினார்? என்று கேட்டார்கள்..... தெரியவில்லை என்று சொன்னான்...  இவர் காலையிலிருந்து எங்கும் உட்காரவேயில்லை. உடம்பு சுகமில்லையா என்று அவரையே கேட்டார்கள்.....இவர் இங்குமங்கும் நடந்துக் கொண்டேயிருந்தார் என்று கூட்டத்திலிருந்த ஒருவர் அவனிடம் சொன்னார்...அவர் உள்ளே சென்று சபை முழுக்க ஆட்கள் நிரம்பியிருந்தவர் மத்தியில்  அமர்ந்துக் கொண்டார். பின்னர் மேடையில் ஏறி சிலருடன் அமர்ந்தவர் அங்கிருந்து அவனை பார்த்தவுடன்  அவர்க்கு முன்பிருந்ததைப் போன்று முகம் மெல்லாம்  சிவந்தது....போகும் போது  ஒருவரிடம் நின்று எதோ பேசினார்.....அவனைக் கடந்து நடந்து செல்லும்போது சொல்லிவிட்டேன் என்று சொன்னார்.....மாலை அவன் பைக்கில் ...அந்த புகழ்பெற்ற ஆலயத்தைக் கடந்துச் செல்லும் போது .... சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள அந்த கோவிலின் மேலிருந்து ஒளி கீழே இறங்கிப் பரவி  மெயின் ரோடு வரை பரவி கரைந்து கொண்டு இருந்ததை கவனித்தான் .... எதற்காக அவனை தேடி அலுவலகம் வரை வர வேண்டும்..... எதைச் சொல்ல அந்த தெய்வம் தேடி வந்ததேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே கோவிலை கடந்து சென்றான்..... 🌿