Monday, March 23, 2026

உடலும் மனமும்


உடலிலிருந்து வெளியேறுவது எல்லாம் நம் உடல் நலத்திற்கு உகந்தது இல்லை என்று கூறி வைத்திருக்கிறார்கள்.... 2021 இல் ஏப்ரல் மாதமாக இருக்கக் கூடும்... யாத்கீர் மாவட்டம் ... வறண்ட காட்டில்  சிறுநீர் கழித்தேன்... காடுகளில் வேலை நடக்கும் போது ... வேறிடமேது .... ஊர்வன தெண்டில் மற்றும் சிறு மிருகங்கள் உடனே கழித்த இடத்திற்கு  வந்தன.... காரணம் நீர் வாசம்.... பாம்புகள் வந்து விட கூடாது என்று நினைத்துக் கொண்டேன்...  மாலையில் வேலை முடித்து அதே வழியில் திரும்பும் போது... கழித்த இடத்தில் கறுப்பு காட்டெறும்புகள் சுற்றி இருந்தன.... எனக்கு நீரிழவு இருக்கிறது....  அதனால் எறும்புகள் வந்திருக்கலாம்.... நீருக்கும் வாசம் உண்டு.... நீர் நிலைகளுக்கும் வாசம் உண்டு.... காடுகளில் வெளிக்கி போக மாட்டேன்.... அது ஆபத்தை விளைவிக்கும்.... காடுகளில் பணியாற்றுபவர்க்கு இது தெரிந்திருக்கலாம்....  திறந்த வெளி சுற்றளவில் ஈரப்பதம் இருக்காது.... உடலின் வியர்வை உடனே ஈரப்பதமாகி காற்றில் கரைந்து மிருகங்களை வரவழைத்து விடும்... அதனால் ஆபத்து அதிகம்....  சில வருடம் முன்பு விஷம் கலந்த மருந்தை சாப்பிட நேர்ந்தது.... அந்த விஷம் என் வலது காலில் .ஓட்டை போட்டு ... தினம் கழிவு அந்த காலின் துளை வழியே வெளியே வடிந்து ...பின்பு ஒரு மாதம் கழித்து நின்று மெதுவாக கருப்பாக சதை மாறி மூடி அடைத்துக் கொண்டது... உடல் தேவையில்லாததை வெளியேற்ற பார்க்கும் என்று வைத்தியர் சொன்னார்.... உடம்பில் விஷம் இருந்தால் வால் மிளகை நீரில் கொதிக்க வைத்து ... நீரை அருந்தலாம் என்று சொன்னார்... வில்வ இலையையும் பருகலாம் .... வெண்ணெய் சாப்பிட வேண்டும் ...என்று வைத்திய முறைகள் நிறைய உள்ளன.

கிரகங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை.... பரிகாரம் பிரயாசித்தம் எதுவும் மக்களுக்கு உபயோகமில்லை..... அவரவர் பலாபலனை அவரவர் அனுபவிக்க வேண்டி வரும் .. மிச்ச மீதியை பிள்ளைகள் அனுபவிக்கும்... ...  அதனால் தவிர்க்க இயலாமல் கட்டாயம் கருதி சிலர்க்கு ஜோதிடம் சொல்வேன்.... மற்றபடி ஊரெல்லாம் டுபாக்கூர் ஜோதிடர்கள் சொல்வது  பற்றி நமக்கேன் கவலை... சந்து பொந்தெல்லாம் புது கோவில்கள் உருவாகியிருக்கின்றன.... பழமையான கோவில்கள் பொலிவிலக்கின்றன .... மனத்தை மட்டுமே பார்த்துப் பழக  வேண்டும் .... பொறி அடங்கினாலொழிய சித்தம் வாய்க்காது.... மூன்று வேளையும் சாப்பிட்டால் முக்காலமும் ஆண்கள் பெண்கள் கனவில் வருவர்.... முரட்டு தீனி சாப்பிட்டால் காதல்கள் வலுப் பெரும்.... பக்தி மான் வேஷம் போட்டால் கொஞ்ச காலம் நன்றாக இருப்பதுப் போல தெரியும்.... நல்லபடியாக செல்லாது.. காலம் பதில் கொண்டு வரும்.... தான் தோன்றித்தனமாக யோசித்து அதை சரிவர நிவர்த்தி செய்யாமல் இருப்பதற்கு தண்டனை கட்டாயம் உண்டு.... சனிப் பெயர்ச்சி ஆரம்பித்தது இரண்டு மாதம் முன்பே... பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டதை நாம் பார்க்கிறோம்.... நான் பைக்கில் இருந்து கீழே விழுந்தேன்... காலில் அடி... சிலர்க்கு உடல்நிலை மோசமாகி கொண்டே போகிறது.... நமக்கு எல்லாம் தெரியும் என்கிற அரைகுறை ஆட்கள் சொல்வதை என்றும் நம்பாதீர்கள்... அதற்கு தாமரை பதிப்பகத்தில் புத்தகம் வாங்கி படிக்கலாம் ... ஞானம் என்பது எப்படி வருகிறது என்று படி படியாக தான் ஒருவர் அறிய முடியும்... அதற்கு புத்தியை நல்லவிதமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்....ஆரம்ப படியில் கற்றுக் கொண்ட இடத்திலேயே நின்று தொங்கினால் பயனில்லை.... பிறகு மனமும் முதர்ச்சியடையாமல் அறிவும் தெளியாமல் வீணாக போய்க் கொண்டிருக்கும்  பலரை பார்த்திருக்கிறேன் ....அவர்களை அப்படியே விட்டு விட வேண்டும்.... அவரவருடைய கர்மா...போய் சேரட்டும்... கருணை கொண்டு மனத்தால் நாம் உதவிடும் போது அதைப் பெற்றுக் கொண்டு நம்மைச் சாடுவர்.... கொஞ்ச கொஞ்சமாக அவர்கள் அறியாமலேயே ஆன்மீக போர்வையிலேயே  அழிந்துப் போவர்

🌿தில்லைராஜ்

1 comment:

Mithran said...

Brother hope there is an opportunity to meet you, Nanrigal.